Thursday, June 18, 2009

என் ஆத்தா மகமாயி





ஓடி விளையாடு பாப்பான்னு
உக்காந்து படிச்சேன்
ஒன்னுக்கு விடும் போது
ஓடி ஓடி திரிஞ்சேன்

ஒன்னாங்கிளாஸ் படிக்கும் போது
தெருவில நிக்கும் பாட்டிக்கு
சத்துணவு உருண்டயை தெரியாம குடுத்தேன்
ஊருக்குள்ள திரிஞ்ச நாய்க்கு
சோறு போடலைன்னு
அம்மாகிட்ட சண்டைக்கு நின்னேன்


காலையில வாத்தியார் சொல்லி
கொட்டு வைச்சவன் பகையாளியா ஆக்கினேன்
சாயங்காலம் நெல்லிகாய் கொடுத்தவுடன்
அவனே என் தோஸ்த்துன்னு ஓடினேன்


தங்கச்சிகிட்ட போட்ட அடி புடி
சண்டை இன்னும் மறக்கல
அண்ணன்கிட்ட திருடி தின்ன லட்டு
நெஞ்ச விட்டு இன்னும் இறங்கல

பக்கத்து வீட்டு மாமா மண்ட சொல்லுது
நான் எறிஞ்ச கல்லை
அப்பா அடிச்ச அடி இன்னும் சொல்லுது
நான் பறிச்ச மாங்காயை

பொறுப்பு கூடி போச்சுன்னு
பொறுமை இழந்து நிக்கிறேன்
வெறுமையான வாழ்க்கையில
வெந்து வெந்து தவிக்கிறேன்


அன்பை தூக்கி சாப்பிட்டு
ஆணவம் முழிச்சி நிக்குது
பொறமை தீயை வச்சுகிட்ட - எனக்கு
சுடுகிற காரணமும் தெரியல


உன் குழந்தைகளுல ஒருத்தன்னு
சொல்லிகிட்டு திரிகிறேன்
குழந்தை மனசை
அழிச்சிட்டு நிக்கிறேன் - என் ஆத்தா மகமாயி

Tuesday, June 16, 2009

சூப்பர்நோவா கண்டுபிடிக்க வயசு என்ன வேணும்?




ஒரு நட்சத்திரம் வெடிச்சு சிதறும் நிகழ்வைத்தான் நோவா இல்ல சூப்பர்நோவான்னு சொல்லுவாங்க.

2008 நவம்பர் மாசம் கரோலின் மூர்(Caroline Moore) என்கிற 14 வயசு மாணவி நம்ம கேலக்ஸில ஒரு சூப்பர்நோவா(Supernova) தோன்றியதை கண்டுபிடிச்சிருக்காங்க.
அதை சமீபத்தில விஞ்ஞானிகள் உறுதி படுத்திருக்காங்க. இதனால குறைஞ்ச வயசில சூப்பர்நோவா கண்டுபிடிச்சவர்ங்கிற பட்டத்தை தட்டி சென்றுள்ளார்.
அந்த இளம் விஞ்ஞானி கண்டுபிடிச்ச சூப்ப்ர்நோவாவுக்கு "SN2008ha" பெயர் வைத்துள்ளனர்.

இதுல இருந்து வருகிற ஒளி நம்ம சூரிய ஒளியை விட 25 மில்லியன் மடங்கு அதிகமாம். வெடிச்சு சிதறின நட்சத்திரத்தின் பாகங்கள் குறைஞ்ச வேகத்துல தான் வருதாம் அதாவது ஒரு மணி நேரத்துக்கு 4.5 மில்லியம் மைல் வேகம் தானாம். சராசரியா இந்த மாதிரி வெடிச்சு சிதறின பாகங்கள் 22 மில்லியம் மைல் வேகதுல வருமாம்.

இதையே ஸ்பீடு கம்மின்னு சொல்லுற ஆளுக நம்ம ஊர் டவுன் பஸ்ஸ என்னான்னு சொல்லுவாங்க.நம்ம ஊரு டவுன் பஸ் 40 கீ.மீ வேகத்துல போனாலே சூப்பர் பாஸ்ட்ன்னு பேர் வச்சுடுவாங்க. இதுல இருந்து என்ன தெரியுது சாதனைக்கு வயது தேவையில்லைன்னு. ஆனா என்ன செய்ய நமக்கு(என்க்கு) தான் ஒன்னும் வரமாட்டீங்குது.

Saturday, June 13, 2009

நான் தம் அடிக்கிற ஸ்டைலை பாத்து




ரவுண்டு ரவுண்டா புகை விட்டு
பெருமிதம் கொள்வேன்
உனக்கு ரவுண்டு கட்ட நான்
ரெடின்னு நினைச்சு நினைச்சு சிரிப்ப

நீ தெரு கோடியில இருந்தாலும்
தேடி வந்து பாப்பேன்
கைமாற எமபுரிக்கு செல்லும் வழியை
கேக்காமலே கொடுப்ப


இது தான் என்னோட கடைசின்னு
சொல்லி சொல்லி அடிப்பேன்
கடைசி வரை நீ இருக்க மாட்டேன்னு
கதறி கதறி அழுவ


வெள்ளையனை வெளியேற்றி
பல காலம் ஆச்சி
வெள்ளையான உன்னை வெளியே
தள்ளி டயடு தான் ஆச்சி


உனக்கு ஆறாம் விரலுன்னு
கவிதை எல்லாம் படைப்பேன்
எனக்கு ஆறா புண்னை
நெஞ்சில் தானே கொடுப்ப


புகையா மறைஞ்சு எனக்கு
சிக்னல் கொடுப்ப
சிக்கல் கொடுத்தவுடன் உன்னை
நான் துறப்பேன்


ஒன்னு ஒன்னா உன்னை
நான் அழிப்பேன்
கடைசில மொத்தமா என் கதையை
நீ முடிப்ப

Saturday, June 6, 2009

அட நம்மளையும் மதிக்கிறாங்கப்பா

அண்ணன் வணங்காமுடி மாதிரி நல்ல மனுசங்க இருக்கிறவரைக்கும் இந்த பூமில மழை பொய்க்காதுங்கோ. என்னையும் தொடர் பதிவுக்கு அழைச்சுகிட்டு வந்த அண்ணன் வணங்காமுடி அவங்களுக்கு என் நன்றிங்க...


1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

என்னுடைய முழு பெயர் விஷ்ணுகுமார். அப்பாவுக்கு பெருமாள் மேல அளவுகடந்த பக்தியால எனக்கு இந்த பெயரை வச்சுட்டாரு. நமக்கும் இந்த பெயர் ரொம்ப பிடிச்சி போச்சுங்கோ.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

முந்தாநேத்து நானும் என் நன்பனும் ஹோட்டல்ல சாப்பிட்டு 86 ரூபா பில்லுக்கு 500 ரூபா குடுத்தோம் அதுக்கு அந்த கடைகாரன் 14 ரூபா மட்டும் மிச்சம் கொடுத்தான். கேட்டா 100 ரூபா தான் கொடுத்தீன்கன்னு சொல்லுரான். நாங்களும் எவ்வளவோ வாய் சண்டை போட்டு பார்த்தோம்,முடியல, அப்ப மனசு எவ்வளவு அழுததது தெரியுமா

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

கோழி கூட நல்லா கிறுக்குமுன்னு ஆறாம் வகுப்பு டீச்சர் என்னோட விரல் முட்டிலே அடிச்சாங்க. ஆனா அவங்க அடிச்ச அடிக்கு பலன் இல்லாம போயிருச்சு

4.பிடித்த மதிய உணவு என்ன?

சோறு கண்ட இடம் சொர்க்கம்

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

என்னோட என்ன அலைவரிசை ஒத்து போறவங்கன்னா விடா பிடியா பிடிச்சுக்குவேன் அப்படி இல்லாட்டி ஹாய்...பாய் தான்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா... அருவியில் குளிக்க பிடிக்குமா?

கடல் தான் நம்மளோட பேவரிட். சும்மா அலை அலையா வந்துகிட்டு, அலையுல நின்னு கிட்டு இருந்தா சும்மா முன்ன பின்ன தள்ளி விட்டுகிட்டு இருக்கும் பாருங்க.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகத்தை தான்... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வடிவத்தை கொடுத்த இயற்கையின் பரிசை எப்படிங்க பார்க்காம இருக்க முடியும்.
எப்படி தான் அழகா இருக்காங்களோ...

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

யாரு ஏதாவது கேட்டா உடனே இரக்கபடுவது பிடிச்ச விசயம்

பட்டு திருந்தாத ஜென்மம் - இது பிடிக்காத விசயம்

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

31-வது கேள்விக்கான பதிலும் இதுவும் ஒன்னு.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அப்படில்லாம் யாரும் கிடையாதுங்க.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

கரண்ட வேற கட் பண்ணிட்டானுங்க. நீல கலர் லுங்கியோட உக்காந்திருக்கங்க.

12.என்ன பார்த்து // கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

கொக்கு சைவ கொக்கு ஒரு கெண்ட மீனை கண்டு பாட்டு கேட்டுட்டு இருக்கேங்க.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

பசுமை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

14.பிடித்த மணம்?

மண்ணென்னைய் அடுப்பு பற்ற வைக்கும் பொழுது வருகிற வாசனை ரொம்ப பிடிக்கும்

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

முக்கோணம் : இவரோட எழுத்தில எப்பொழுது சமூக அக்கறை இருக்கும். நான் என்ன தான் மொக்கயா பதிவு போட்டாலும் புகழுந்து கமண்ட் அடிக்கிற ரொம்ப ரொம்ப நல்ல மனிதர்.

களப்பிரர் : கொஞ்சமா எழுதுவார் ஆனா ரொம்ப நல்லா எழுதுவார்.

சிவசுப்பிரமணியன் : நிகழ்காலத்தில்ன்னு பெயர் கொண்டு எழுதுபவர். ரொம்ப தன்னபிக்கை உடைய எழுத்துகள் இவரிடம் இருந்து வரும். ஆனா இவர் ஏற்கனவே தொடர் பதிவுல கலந்துகிட்டாரு.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு?

கொஞ்சம் இல்ல ரொம்பவே நக்கல் அடிக்கிற மனிதர். அவர் எழுதினதுல எனக்கு ரொம்ப பிடிச்ச பதிவு ஆர்குட் அல்ச்சாடியம்


17. பிடித்த விளையாட்டு?

எத்தனை பேரு விளையாடுரோமோ அத்தனை குழி தோண்டிகிட்டு, பந்தை உருட்டி விட்டு யாரோட குழியில விழுதோ அவங்க பந்தை எடுத்து அடுத்தவங்க மேல எறியனும் அதுக்குள்ள அத்த்னை பேரும் ஒரு குறிபிட்ட தூரத்தில இருக்கிற போஸ்ட் கம்பத்தை தொடனும் அப்புரம் அந்த பையன் பந்தை மேலே தூங்கி போட்டு கிட்டே இருப்பான் அதுகுள்ள குழிய வந்து தொடனும், அப்படி எல்லாரும் குழிய தொட்ட்டுட்ட அவனுக்கு ஒரு பிள்ளைன்னு ஒரு சின்ன கல்ல தூக்கி அவன் குழியில போட்டிடுவோம் கடைசில யாரு அதிகமா பிள்ளை வாங்கி இருக்காங்களோ அவங்க தான் தோத்தாலி. ஆமாங்க அதுக்கு பேரு தான் குழி பந்து

18.கண்ணாடி அணிபவரா?

டாக்டரே வேண்டான்னு சொன்னதுக்கு அப்புரமும் கண்ணாடி போடனுமுன்னு சொல்லி ஒரு மூணு மாசம் போட்டுகிட்டு அலைஞ்சேன் அதுக்கப்புரம் அந்த ஆசை விட்டு போச்சுங்க.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

காமெடி படங்கள் என்றால் உயிர்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

பசங்க படம். அய்யோ! என்னாமா எடுத்திருக்காங்க

பசங்க படமுன்னு சொன்னதுனால ஒரு ப்ளாஸ்பேக். ஒரு சமயம் எங்க ஊருல பயங்கரமான தண்ணி பஞ்சம். அப்ப என்னோட கூட்டாளிகளோட சைக்கிள்ல மூணு நாலு கிலோ மீட்டர் போய் அடி பைப்புல தண்ணி அடிச்சிட்டு கொண்டு வருவேன் அதுக்கு அம்மாகிட்ட நான் வங்கிற லஞ்சம் இருபத்தைந்து பைசா. ஆனா என்ன சும்மா மூணு நாலு மணி நேரம் காத்துகிடந்து அடி பம்புல இரண்டு குடம் தண்ணி அடிச்சிட்டு வருவோம். இதனால பசங்கலெல்லாம் சேர்ந்து ஊருக்கு வெளியில ஆளே இல்லாத அடி பம்பு தேடி கண்டு பிடிப்போம். ஒரு மணி நேரத்தில தண்ணி கொண்டு வந்திருவோம். அதனால எங்க ஏரியாவுல எங்களுக்கு கில்லாடி பசங்கன்னு பேரு.


21.பிடித்த பருவ காலம் எது?

மார்கழி மாசம் நாலு மணிக்கெல்லாம் எந்திருச்சி குளிச்சி கோயிலுக்கு போய் அங்க கொடுக்கிற பொங்கலை இலையில வச்சுகிட்டு அப்படியே எடுத்து சாப்பிட்ட பொங்கல் குறைஞ்சி போயிருமுன்னு தொட்டு தொட்டு நக்கிட்டு வந்த காலம்.

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

அட போங்க... பிளாக்கர்ஸ் சொல்லுற மேட்டரே படிக்க முடியாம வதவதன்னு இருக்கு. அப்புரம் எதுக்கு புக்கு.

23.உங்கள் டெஸ்க்டொப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அனிமல்ன்னா அப்படி ஒரு பிரியம் ஏன்னா குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன். சில நேரத்தில ஒரு நாளைக்கு ஆறு ஏழு படம் கூட மாத்துவேன்.

24.பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

ஒரு தொலைபேசி உரையாடலுக்காக நான் காத்திருக்கும் பொழுது அவர் தருகிற செல்போன் ரிங் சப்தம். இளையராஜவின் பாட்டு சப்தம் ரொம்ப பிடிக்கும்

பஸ் கொடுக்கிற ஹாரன் சப்தம் கண்டாலே எரிச்சல் வரும்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

ஒரே ஒரு முறை டெல்லி போயிக்கேன் ஆனா தாஜ்மகால் பாக்கலிங்க.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இது என்னை அவமானபடுத்த வேண்டும் என்றே கேட்க பட்ட கேள்விங்க.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

உள்குத்தோட இருக்கிறவங்களை நம்மால ஏத்துகிற முடியாதுங்கோ.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

"ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்"


29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

சுற்றுலா தலம் என்று சொல்ல முடியாது ஆன்மிக தலம்
திருநெல்வேலியிருந்து நாகர்கோவில் செல்லும் பாதையில் உள்ள திருகுறுங்குடி, 90 நிமிடம் ம்லையில் ந்டந்து சென்று பெருமாளை தரிசித்துவிட்டு ம்லை மேல் ஓடுகிற ஆற்றங்கலையில் தனிமையில் அமர்ந்தால் உலகம் மறந்துவிடும்.


30.எப்படி இருக்கணும்னு ஆசை?

காலத்தோட ஓட்டத்தில் கரைந்து போகம இருக்கனும்.

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம்?

யாரவது என்னோட அப்பா அம்மாகிட்ட சொல்லுங்களேன். பையனுக்கு வயசாகிட்டே போகுதுன்னுஇன்னும் சின்ன பிள்ளையாவே நினைக்கிறாங்க.

அய்யயோ சும்மா சொன்னேங்க நீங்க வாட்டுக்க சொல்லிடாதீங்க நான் இன்னும் சின்ன பையனுங்கோ.

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்ந்து பாத்தவன் நாடகம்பான்.
வாழ்ந்துகிட்டு இருக்கிறவன் நரகம்பான்
வாழ போறவன் நாளை நமதேம்பான்.

மொத்ததில் வாழ்க்கையை பார்த்தா இடியாப்பம் சும்மா தேங்கா பால் ஊத்தி சாப்பிட்டா அமிர்தம்.

Thursday, June 4, 2009

ஒரு மணி அடித்தால்

சொன்னதை மட்டும் சொல்லி
கிளி பிள்ளை ஆனாய்.
மிஸ்டுகால் மூலம் உரைத்தாய்
கொடுத்ததையே பெறுவாய்.

அக்காவின் குழந்தை பிறப்பை சொல்லி
சந்தோஷத்தை வாரி கொடுத்தாய்
அருமை நண்பனின் இறப்பை சொல்லி
சந்தோஷத்தை எல்லாம் கெடுத்தாய்

இன்கம்மிங் என்றால் மின்சாரம்
மட்டுமே என் செலவு
அவுட்கோயிங் என்றால் என் சம்பளம்
எல்லாம் உன் வரவு

கேட்க இன்பமாய் இருக்கிறது
உன் குரல்
உன் கட்டணத்தை பார்த்து
வரமறுகிறது என் குரல்

உன் பேச்சு கேட்பதால்
செவி கொடுக்க மறுக்கிறான் நண்பன் -
என் பேச்சை கேட்க.
அவன் பேச்சை கேட்க மறுக்கிறேன்
உன் பேச்சை கேட்க.

எத்தனை தொழிற்சாலைகள் உன்னை
உருவாக்கினாலும் ஏனோ உன் தலையாய
பண்புகளை விட மறுக்கிறாய்.
உன்னை பலநேரம் வைத்திருக்கும் மனிதன் தான்
தொலைந்து நிற்கின்றான்

Monday, May 18, 2009

பில்கேட்ஸை கைது பண்ணாங்களா?

1977 இல் பில்கேட்ஸ் வாகனத்தை வேகமாக ஓட்டி சென்றதால் கைது செய்யபட்டார்.







மன்சூர் அலிகான் தோல்வி.






ஊதா கலரு சட்டை போட்டு
ஊரெல்லாம் சொல்லிகிட்டு
இலட்சியம் தான் உனக்கிருக்குன்னு
இலட்சிய தி.மு.கவிலுல சேர்ந்ததுமே
உன் தலைவர் உனக்கு தான்
திருச்சின்னு ஒதுக்கி வைச்சான்

கடல மிட்டாய் வாங்கி குடுத்து
கட்சிகாரனை இழுக்க நினைச்ச
கட்டிங் கிடைக்குதுன்னு - பல
கட்சிக்கு பயபுள்ளைக ஓடி போயிட்டான்

பட்டம் தான் உன் சின்னமுன்னு
பக்குவமா எலக்ஷன் கமிஷன் சொன்னதும்
பல தெருவுக்கு போய்
ஓட்ட கேட்ட - சத்திரம்
பஸ் ஸ்டாண்டுக்கும் போய்
ஓட்ட தான் - நீ கேட்ட

உன்னையே நாயின்னு -
நீ சொல்லிகிட்டு
திருஞ்சத பார்த்த மக்கள்
பைத்தியம் தான் நீ-ன்னு
பயந்து போயி
பக்கத்து கட்சிக்கு ஒட்ட போட்டு
படுதோல்வி உன்னை ஆக்கினாங்க

பல தோல்வி - நீ கண்ட
படு தோல்வியும் - நீ கண்ட
பக்க பலமா யார் இருக்க
பதினொன்னுல நீ முதல்வராக


Thursday, May 14, 2009

உனக்குள்ள எனக்கு பிடிச்சது ஜன்னல் ஓர சேரு



பகட்டான உடை அணிந்து வந்தால்
உனக்கு பெயர் சொகுசு
பரிதாபமாய் நீ வந்தால்
உனக்கு இல்லை மவுசு.

அரசு புகை பிடிக்க தடை போட்டு
பல காலம் ஆச்சு
அதை கடை பிடிக்க உனக்கு மட்டும்
விதி விலக்குன்னு பேச்சு.

உனக்குள்ள எனக்கு பிடிச்சது
ஜன்னல் ஓர சேரு
சாலையில் நீ எனக்கு எப்பொழுதும்
தேவலோக தேரு

கரெக்ட் டைமுக்கு டிரைவர் அண்ணன்
கொண்டு வரமாட்டாரு உன்னை
ரைட் தான் கண்டெக்டர் அண்ணன்
சொல்லிடுவாரு நான் ஏறுவதற்க்கு முன்னே

பல நேரம் கேக்க மாட்ட
பிரேக் பேச்ச
சில நேரம் வாங்கிடுவ
எங்க மூச்ச

பல ஊர பாத்தாலும் இல்லை
உனக்கு அலுப்பு
சில ஊருக்கு போக மாட்டீங்கிற
ஏன் இந்த வெறுப்பு

நீ எப்பொதும் எனக்கு
கனவு கன்னி
உனக்காக காத்திருந்து எனக்கு
தவிக்குது தண்ணி.

Wednesday, May 13, 2009

என்ன கார்த்திக் உங்க ஒர்த் இவ்வளவுதானா?

இன்றைய செய்தி தாள்களை படிக்கும் பொழுது சில செய்திகள் மனசை ரணகள படுத்திவிட்டது அதை உங்களுடம் பகிர்ந்து கொள்கிறேன்



செய்தி : வருண் காந்தி உத்திர பிரதேச முதல்வராக விருப்பம்







செய்தி : கார்த்திக் ரூ 5 லட்சம் பணமோசடி : தேனி வேட்பாளர் பார்வதி புகார்








செய்தி : நான்காவது அணியில் விரிசல் இல்லை : பாஸ்வான் திட்டவட்டம்







செய்தி : உயர்நீதி மன்றத்தில் கிரகலட்சுமி அப்பீல், குடும்ப நல கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து

Tuesday, May 12, 2009

மனுசன் காலையில நீராடனும் அது மாதிரி வாழ்க்கையில போராடனும்

நேற்று விஜய.டி.ஆரின் பேட்டி ஒன்றை கண்டேன். அதில் அவர் பேசிய பேச்சின் சில வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்(ல்)ளத்தான் இந்த பதிவு.







































அப்பு, பட்ட போட்டு காய்ச்சுன மரமா இல்ல பட்ட போடாத மரம்,ஏன்னா பட்ட போட்டு காய்ச்சுனாதான் ஜ்வ்வு ஏறுமுன்னு பெரியவங்க சொல்லுவாங்க. அது சரி காய்ச்ச மரத்துக்கு கல்லடி, காய்ச்சாத மரத்துக்கு உங்க சொல்லடியா? அம்மாடி.

Monday, May 11, 2009

எதை கொண்டு வந்தாய் இழப்பதற்க்கு

தினதந்தி செய்தி :கொல்கத்தா அரைஇறுதி வாய்ப்பை இழந்தது

டிஸ்கி : அப்பு இது தெரிஞ்சுக்க இவ்வளவு காலமா உங்களுக்கு எங்க கிட்ட கேட்டுருந்தா முன்னாடியே சொல்லிருப்போம்ல.






வித்தியாசமா பன்ணுறாங்களாம்.



காலுல விழுந்த்துட்டா மட்டும் நாங்க உங்க பேச்ச கேட்போமுன்னு நினைச்சியா? போப்பா போய் வேற எதாவது உருப்பிடியான வேலை இருந்தா பாரு. காமெடி பண்ணிகிட்டு இருக்க

ஆசிர்வாதம் வாங்குபவர் : சத்தியாகிரக அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ராமகிருஷ்ண சாஸ்திரி
ஆசிர்வாதம் வழங்குபவர் : ஏதோ துணிகடை அம்மா
ஆசிர்வாதம் வாங்குவதன் நோக்கம் : நல்லவங்களுக்கு ஓட்டு போடனுமாம்.
படம் : தினமலர்

Saturday, May 9, 2009

தொலைக்காட்சி


அந்த குழந்தைகளின் ஆட்டம்
பார்க தடையாயிருந்தாய்
என் நண்பர்களின் அரட்டை
ஆரவாரம் இல்லாமலாக்கினாய்


நிலையான மனது தான்
உன்னிடம் உள்ளதா
கோபம் கொள்கிறாய், திடிரென
கூல் என்கிறாய்
சிரிப்பு காட்டுகிறாய்,சிலநேரத்தில்
அழுக வைக்கிறாய்

நீ ஆண்களுக்கு ஜஸ்வர்யாராயா
இல்லை பெண்களுக்கு மன்மதனா
எந்நேரமும் உன்னை கண்
இமைக்காமல் காண வைக்கிறாய்

உன்னில் தவறில்லை
உன்னை பார்க்கும் மனிதர்கள்
தவறிப்போவதை தவிர.

Friday, May 8, 2009

மலர்களே...மலர்களே


ஒருநாள் வாழ்வு தான் உனக்கு
என்று என்னையே நான் சமாதானம்
செய்து கொண்ட நாட்களும் உண்டு.

சவ ஊர்வலத்தில் சாலையில் விழுந்து
கால்களில் அடிபட்டு நீ இறக்கும் கணங்களை
பார்த்து சிரித்த கணங்களும் உண்டு.

என்னவளின் தலை மீது அமர்ந்து
சிரிக்கும் பொழுது திமிர் பிடித்து அலைகின்றாய்
என்று நினைத்த நாட்களும் உண்டு.

கடவுளின் கழுத்தில் கம்பீரமாக
இருக்கும்பொழுது நீ ஆணவம் பிடித்தவள்
என்று எண்ணிய கணங்களும் உண்டு.

சாலையில் சக்கரத்தில் அடிபட்டு அருவருப்பாய்
இறந்த நண்பனின் மேனியை அழகாய்
மாற்றி புத்தி புகட்டினாய்
யாருக்கேனும் நலம் பட இரு.

Wednesday, May 6, 2009

அண்டத்தில் ஒரு பயணம்


5 வயசாக இருந்தாலும் இராகேஷ் கொஞ்சம் அதி புத்திசாலியாகதான் இருக்கான்.

"அப்பா, சுத்தமா போர் அடிக்குதுப்பா சும்மா ஒரு அண்ட டூர் போகலாமுன்னு இருக்கேன் போய் ஏதாவது புதுசா ஏதாவது பிளானட் கண்டுபிடிக்க போறேன்
அதுக்கு 'ராக்கி 100' பெயர் வைக்கனும் ஏன்னா நான் கண்டுபிடிக்க போர 100 வது பிளானட், ஒரு வேளை என்னுடைய இலட்சியமான கடவுள் இருக்கிற பிளானட்டை கண்டுபிடிச்சாலும் கண்டுபிடிச்சுடுவேன்"

"பக்கத்துலயே ஏதாவது கண்டுபிடிப்பா. நீ ரொம்ம தூரம் போயி கண்டுபிடிக்கிற, சரி எதுல டிராவல் பண்ணுர? யுனிவர்சல் பிளைட்டா இல்ல யுனிவர்சல் ராக்கெட்டா? ரிசர்வ் பண்ணிட்டியா ?"

"இல்லப்பா இந்த தடவ நான் ஸ்கை ஸ்கூட்டர்ல தான் டிராவல் பண்ணபோறேன்"

"ரொம்ப அலுப்பா இருக்குமே?"

"வந்து ரெஸ்ட் எடுத்துகிட்டா சரியாயுடும்"

"சரி, சில இடத்துக்கு போன பியுயல்(fuel) கிடைக்காது அந்த பியுயல் பேக்கை(bag) எடுத்துக்கோ"

"சரிப்பா, நம்ம மாமா அடுத்த வருசத்துல ஜெயில்ல இருந்து விடுதலை ஆயிடுவாருல"

"ஆமா, எதுக்கு கேக்குரா?"

"இல்லை ஜெயில்னா எப்படி இருக்கும் என்னவெல்லாம் பண்ணுவாங்கன்னு கேட்கனும்"

"அதுக்கு ஏன் மாமாவ கேட்கனும், நான் சொல்லுரேன்"

"இல்லப்பா அவர்கிட்ட கேட்டா அனுபவ பூர்வமாக சொல்லுவாருல்ல அதான்"

"அதுக்கேன்ன அவர்கிட்டயும் கேட்டுக்க, நானும் சொல்லுரேன், ஜெயிலுங்கிறது ஒரு குட்டி பிளானட், அந்த கிரகத்துகுள்ள மட்டும் தான் சுத்திகிட்டு ஒருக்கனும். ஒரு வேலையும் குடுக்க மாட்டாங்க, அந்த கிரகம் சுத்தமாவே இருக்காது, பழைய டெக்னாலஜிஸ் தான் யூஸ் பண்ணுவாங்க, ஒரு காலத்துல அந்த கிரகம் தான் மனித இனத்தோட ஆதாரமா இருந்தது, அதுக்கு பேரு பூமி"

"அப்ப அந்த காலத்துல எல்லாம் எல்லாரும் ஜெயில்ல இருந்தாங்கன்னு சொல்லுங்க"

(யாவும் கற்பனையே,தொடரும்)

Tuesday, May 5, 2009

மகாலிங்க மலை கருப்பண்ண சாமி


மகாலிங்க மலை பற்றி தெரியனுமா இங்க படிச்சு தெரிஞ்சுக்கோங்க

நான் எம்.சி.ஏ. முதலாமாண்டு படிக்கும் பொழுது, காலேஜ்ல டூர் போனாங்க. சில பல காரணங்களால் நான் டூர் போகலை. அதே போல சில பசங்களும் டூர் போகலை.
அதுல மூணு பேர் மட்டும் மாகலிங்க மலைக்கு போகலாமுன்னு பிளான் பண்ணினோம். எங்க ஊர்ல இருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில இருந்தாலும் நான் போனதில்லை அதனால போகலாமுன்னு முடிவு செஞ்சு பஸ் ஏறி வற்றாயிருப்பு ஊருக்கு போயச்சு.

மலை மேல அன்னதானம் போடூவாங்க என்பது தெரியும், இருந்தாலும் வழி பயணத்தில சாப்பிட பிஸ்கட்டும், முறுக்கும் வாங்கிட்டோம்.
மேல சில கடைகள் இருந்தாலும் ஒரு ரூபாய் அதிகமா தான் விப்பாங்கன்னு என் நண்பன் சொன்னதுனால அத மிச்சபடுத்த வற்றாயிருப்பு ஊருலயே வாங்கிகிட்டோம்(படிக்கிற காலத்துல வீட்டுல குடுக்கிற ஜந்து பத்து ரூபாய் தான் நம்ம சொத்து). மினி பஸ் ஏறி நாலு ரூபாய் டிக்கட் எடுத்து ம்லை அடிவாரம் போய் சேர்ந்தாச்சு அந்த இடத்துக்கு பெயர் தாணிபாறை. கடைசி பஸ் மாலை 6:45க்குன்னு கண்டக்டர் அண்ணன்கிட்ட கெட்டு தெரிஞ்சுகிட்டோம். மலை அடிவாரத்துல இருக்கிற கருப்பண்ண சாமிய கும்பிட்டு மலை ஏற ஆரம்பிச்சோம், என்னால சுத்தமா ஏற முடியல ரெண்டு நிமிசம் நடப்பேன் பத்து நிமிசம் உட்காந்திருப்பேன். அப்பதான் என் நன்பன் கீழ உக்காரதாடா அழுப்பா இருந்தா மலையிலயே அப்படியே சாஞ்சுக்கோன்னு சொல்ல நானும் அப்படியே செய்ய கொஞ்சம் ஆறுதலா இருந்தது, இருந்தாலும் ரொம்பவே கஷ்டபட்டு தான் ஏறிகிட்டு இருந்தேன். ஆனா பாட்டி மார்களும் தாத்தாமார்களும் எந்த கஷ்டமும் இல்லாமல் ஏறிகிட்டு இருந்தாங்க. சில பேர் ஏற முடியாம கீழ போக ரெடியாகிட்டு இருந்தாங்க.பாதி மலை தாண்டி இருப்போம், இடையில கோரக்கர் சித்த்ர் குகை ஒன்னு இருக்கு, அருகிட்ட போய் ஏதாவது தப்பு செஞ்சிருந்தா மன்னிச்சுக்கோங்கன்னு வேண்டிக்கிட்டு கொஞ்ச நேரம் அந்த இடத்துல உட்காந்துகிட்டு அப்புறம் நடக்க ஆரம்புச்சோம், என்ன ஒரு ஆச்சரியம் கொஞ்சம் கூட அலுப்பு தெரியல. மலைக்கு மேலே ஏறியாச்சி நேர சுந்தர மாகலிங்கத்தை கும்பிட்டு,சாப்பிடலாமுன்னு அன்ன சத்திரத்துக்கு போனோம் எல்லாம் காலியா போச்சுன்னு சொன்னவங்க, களி சாப்பிடுவீங்களாப்பான்னு கேட்டாங்க நாங்களும் சாப்பிடுவோமுன்னு சொல்ல பத்து நிமிசத்துல தயார் பண்ணீறோமுன்னு சொல்லி களி செய்ய ஆரம்பிச்சாங்க, தயாரன உடனே எங்களை கூப்பிட்டு உக்கார சொல்லி களி போட்டாங்க. சரியான பசி என்பதால் முதல் ரவுண்டு வேகமா சாப்பிட்டேன், நான் சாப்பிட்ட வேகத்தை பார்த்து அங்க இருந்தவங்க ரெண்டாவது ரவுண்டு வச்சுபுட்டாங்க என்னால சாப்பிட முடியல பக்கத்துல இருந்த என் அருமை நண்பன் ரசிச்சு ருசிச்சு சாப்புட்டு இருந்தான் அவனுக்கே தெரியாம அவன் தட்டுல களிய வச்சுபுட்டு கை கழுவ போயிட்டேன். அப்புரம் சந்தன மாகலிங்க சாமிய தரிசனம் செஞ்சுட்டு, கொஞ்ச தூரம் மலை பக்கம் போவோமுன்னு நடக்க ஆரம்பிச்சோம் . அங்க வன தேவதைகள் நிறைய இருக்கு, நாங்களும் இரண்டு வனதேவதைகளை கும்பிட்டு. அடுத்த வனதேவதையை தேட போகும் போது ஒரு பெரியவர் என்னடா பண்ணுறீங்க. ஒங்கள மாதிரி ஆளுக வன தேவதைகள் கும்பிட கூடாதுடா, கும்பிட்டா கூட வந்துரும், அப்புரம் உங்க ஊருல கோவில் கட்ட சொல்லும் திருவிழா நடத்த சொல்லும், முடியுமா உங்களாள" ன்னு கேட்க எங்க மூணு பேருக்கு ஆட்டம் குடுக்க ஆரம்பிச்சிருச்சு. ஏன்னா இதுக்கு முன்னாடி ரெண்டு வனதேவதைகளை கும்புட்டுவிட்டோம், அந்த தேவைதைகள் கூட வந்துட்டா இருந்தாலும் பலா மரத்து அடி கருப்பண்ண சாமிகிட்ட வேண்டிக்கிருவோம் நினைச்சு அத பத்தி மறந்துடோம். மணி அஞ்சு அரை மணி இருக்கும் சரி கிளப்புவோமுன்னு சுந்தர மாகலிங்கத்தை கும்பிட்டு வெளியில வந்தா ஒரு பாட்டிமா

'எங்கப்பா கிளப்பிட்டீங்கன்னு கேட்டாங்க, நாங்களும் கீழ போறோம்ன்னு சொல்ல, கையில தீ பந்தம் வச்சுருக்கீங்கலான்னு கேட்க இல்லைன்னு சொன்னோம், அப்ப காலையில போங்க. காட்டெருமைங்க நிறைய அழையுதுங்க, அப்புறம் பாதை வேற சரியா தெரியாது' ன்னு சொன்னாங்க,இதையே நிறையா பேர் சொல்ல எங்களுக்கு கொஞ்சம் பயம் தட்டீருச்சி இருந்தாலும் வீட்டுல எங்கள தேடுவாங்கன்னு சொல்லீட்டு கிளம்பினோம். பலாஅடியான் கருப்பண்ண சாமிகிட்ட 'நல்ல படியா எங்களை கீழ ஏறக்கி விட்டுருப்பா'ன்னு வேண்டிக்கிட்டு நடக்க ஆரம்பிச்சோம். நடக்க ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்திலே இருட்ட ஆரம்பிச்சிருச்சு. ஒரு சமயத்துல சுத்தமா வழியே தெரியல. ஆளுக்காளுக்கு ஒரு வழிய காட்ட, நான் ஒரு வழிய காட்ட அந்த வழியில போனா அறாவது அடியில நூறு அடி பள்ளம் கொஞ்சம் கவனம் தவறி இருந்தாலும் சிவன் மலையில இருந்து கைலாயத்திற்க்கு போயிருப்போம். மனசு முழுசும் பயம் தான், விடிஞ்சதுக்கு அப்புரம் போயிக்கிலாமுன்னு அப்படியே அந்த இடத்துலயே உக்காத்துட்டோம். கருப்பண்ண சாமியை கொஞ்சம் திட்டிட்டு இருந்தோம், ரெண்டாவது நிமிசத்துல கண்ணு மின்னிகிட்டு ஒரு உருவம் மலை சரிவுல இருந்துச்சு அத பார்த்தும் எங்க மூணு பேரும் ஒட்டிகிட்டு உக்காத்துகிட்டோம். கடைசில பார்த்தா கருப்பு கலருல ஒரு நாய் வந்து நின்னு எங்கள பார்த்து குலைக்க ஆரம்பிச்சு. நாங்க அப்படியே உக்காந்துகிட்டு இருந்தோம், அந்த பைரவர்(நாய்ன்னு சொல்லுவதை விட பைரவருன்னு சொன்ன நல்லாயிருக்குமுன்னு தோனிச்சு) நடக்க ஆரம்பிச்சாரு. அப்பதான எங்க மூணு பேருல ஒருத்தன் ஒருவேளை நமக்கு வழி காட்டுதோ என்னமோன்னு சொல்ல நாங்களும் அவர் பின்னாடி நடக்க ஆரம்பிச்சோம். அவரும் வழி காட்ட நாங்களும் நடக்க ஆரம்பிச்சோம்.

ஏதாவது வித்தியாசமா சப்தம் கேட்டா அந்த பைரவர் எங்க குறுக்க வந்து நின்னுடுவாரு. அப்புறம் கொஞ்ச தூரம் அவர் மட்டும் போய் பார்த்து சிக்னல் குடுப்பாரு நாங்க மூணு பேரும் அவர் பின்னாடி போவோம். இடையில குதிரை ஏற்றம்முன்னு ஒரு இடம் வரும் அங்க ஒரு நீரோடை இருக்கு அதுல கொஞ்சம் தண்ணீர் அதிகமா தான் போய்கிட்டு இருந்துச்சு. காலையில வரும் பொழுது இடையில இருந்த கல்லுல ஏறி ஒரு வழிய வந்துட்டோம். ஓடையில இறங்கி நடந்த இடுப்பு வரைக்கும் தண்ணீர் இருக்கும் இருந்தாலும் ஏறங்கி நடக்க பயம், கல்லும் இருட்டுல சரியா தெரியல. நாங்க மூணு பேரும் எருமை மாடுக மாதிரி நின்னுகிட்டு இருந்தோம், எங்க கூட்டிட்டு வந்த பைரவர் ஓடைய தாண்டி நடந்து போய்கிட்டு இருந்தாரு, கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புரம் திருப்பி பார்த்தாரு, நாங்க திரு திரு முழிச்சுகிட்டு இருந்த பார்த்தவரு ரெண்டு தடவ குலைச்சாரு(ஒரு வேளை கெட்ட வார்த்தையில திட்டிருப்பாரோ?) அப்புரம் ரெண்டு தடவ ஓடைய தாண்டி காட்டுனாரு அப்புரம் நாங்களும் தாண்டி வந்துட்டோம்,இப்படி ஏழு கிலோ மீட்டர் எங்க கூட வந்தாரு, கடைசில கீழ இருக்கிற கருப்பண்ண சாமி கோவில் வந்துருச்சி நாங்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுட்டு கருப்பண்ண சாமிகிட்ட தேங்க்ஸ் சொல்லிட்டு நம்மள காப்பாத்தி கூட்டி வந்த பைரவருக்கு பிஸ்கட் போடுவோமுன்னு திருப்பி பார்த்தா தலைவர காணோம் நாங்களும் சுத்தி எல்லா இடத்துலயும் தேடி பார்த்துட்டு கடைசில கருப்பண்ண சாமிய பார்த்தா எப்பவும் உக்கிரமா இருக்கிறவரு எங்கள பாசத்தோட பார்த்து சிரிச்ச மாதிரி இருந்துச்சு

Monday, May 4, 2009

லவ் மேட்டரு


நான் காதலிச்ச பெண்ணை பார்க்க 'மதுர' போகலாமுன்னு 'சிவகாசி' பஸ் ஸ்டாண்டுல போய் பஸ் ஏறி போய் அவள் பார்த்தா, அவ கனவுல வந்த ஆளு 'வில்லு' அம்போட வந்தானாம் அதனால என்னை காதலிக்க மாட்டேன்ன்னு சொல்லிட்டா இருந்தாலும் 'காதலுக்கு மாரியாதை' செய்யனுமுன்னு 'பூவே உனக்காக' தான் நான் சொல்ல, சீ போட 'போக்கிரி' நாயேன்னு திட்ட, நாமலும் 'ஆதி' அந்தம் இல்லாதவன் மாதிரி நிக்க 'திருப்பாச்சி' அருவாளோட அவ்ங்க அப்பா வந்து அவளுக்கு 'கோயம்புத்தூர் மாப்ளே' பார்த்தாச்சுடா ஓடிடுன்னு சொல்ல நானும் 'குருவி' மாதிரி ஓடி ஒழிஞ்சி, மறுநாளும் அவள பார்க்க போய்

'நெஞ்சினிலே' நீ தானடி
உன்னை வேட்டையாட வந்த
வேட்டைகாரன் நான் தானடி.
கண்ணுக்குள் நிலவாய் நீ தானடி எப்பொழுதும்
என் பிரியமானவளே'ன்னு

கவிதை பாட அவ கனவுல வந்தவனும் இந்த கவிதைய பாடினானம் அதனால அவ சொன்னா என் கனவுல வந்த 'மின்சார கண்ணா' நீ தானடான்னு சொல்ல
நானும் 'குஷி''ஒன்ஸ்மோர்' கேட்க அவ அப்பன் வந்து ஒரு 'பந்தயம்' வச்சான். என் பொண்ண யாரு ரொம்ப பார்க்குறாங்களோ அவனுக்கு தான் என் பொண்ண கல்யாணம் முடிச்சி தருவேன்னு சொல்ல
அந்த 'கோயம்புத்தூர் மாப்ளே' இரண்டு செகண்டுக்கு மேல பாக்க முடியாம ஓட நீ தான் என் பொன்ன கட்டிக்க வந்த 'ஷாஜகான்'னு சொல்லி கல்யாண நாள் முடிவு பண்ணிட்டு கல்யாணம் கோவில்ல தான் பண்ணனுமுன்னு சொல்லி 'திருமலை' கோவிலா இல்லை 'பகவதி' அம்மன் கோவிலா மண்டைய போட்டு ஒடிச்சி 'தமிழன்' முறைப்படி வீட்டிலே கல்யாணம் வைச்சுகிற எல்லாரும் ஒத்துகிற சமயத்தில 'சுக்கிரன்' சரியான இடத்துல இல்லைன்னு ஜோசியகாரன் சொல்ல கல்யாணத்தை நிப்பாட்டி போயிட்டானுங்க, நானும் காலமெல்லாம் காத்திருப்பேன்' சொல்லி என் 'பிரெண்ட்ஸ்'க்கு லெட்டர் போட்டு விசயத்தை எல்லாம் சொல்லி கடைசில
'பிரியமுடன்'
'விஷ்ணு'
ன்னு
முடிக்கும் பொழுது தப்புச்சோம்டா சாமின்னு கோரஸ்ஸா சப்தம் கேட்க தூங்கிட்டு இருந்த நான் முழிச்சு பார்க்கும் பொழுது அழகிய தமிழ் மகன் படம் முடிஞ்சு போச்சு.

Wednesday, April 29, 2009

தன்மான மொட்டு


ஆறாம் வகுப்பு படிக்கும் இரமேஷ், காலையிம் எழுந்ததும் கொஞ்சம் கலக்கமாகவே இருந்தான். கடந்த ஒரு வாராமாக அறிவியல் புத்தகம் வாங்க வேண்டும் என்று அடம்பிடிக்க முடிந்ததே தவிர அவ்னால் அந்த காரியத்தை நிறைவேற்ற முடியவில்லை. நேற்று இரவு ஊரே கூடும் அளவுக்கு ஒரே அழுகை முடிவு நான்கு அடிகளுன்னு தூங்க போனவன் இப்பதான் எழுந்தான். அம்மாவிடம் போய்

"மாமாகிட்ட தான் நிறைய காசு இருக்கில்ல அவருக்கிட்ட போய் வாங்கிரேன்"

"ஏய் அப்பாவுக்கு அசிங்கம் டா அது, இன்னைக்கு ஸ்கூலுக்கு போ நாளைக்கு அப்பாவ வாங்கி தர சொல்லுரேன்"

வாத்தியார் வெளியில் நிற்க வைத்தது தன் சக நண்பர்கள் தன்னை பாவமாகவும் ஏளனமாகவும் பார்த்தது எல்லாம் கண்முன்னால் தெரிந்தது.
இவர்கள் தன்மான பிரச்சனையில் இரமேஷின் தன்மானம் கொஞ்சம் அதிகமாகத்தான் நசிங்கி போனது.
இன்னைக்கு ஸ்கூலுக்கு போக வேண்டாம் அறிவியல் புத்தகம் வாங்கி தந்ததும் போவோம் என்று நினைத்து வயல் காடுகளின் பக்கம் போய் விட்டான்
அங்கே வயல்களில் தண்ணீர் பாய்ச்சுபவனும் நிரந்தர வேலைகள் ஏதும் இல்லாத மாதவன் இரமேஷை பார்த்துவிட்டான்.

"என்னாடா இங்க சுத்திக்கிட்டு இருக்க" என்று அதட்ட

நடந்தவற்றையும், தான் எடுத்த முடிவையும் இரமேஷ் கூற, சரியாக பட்டது மாதவனுக்கு,தன்னுடனே இருக்குமாறு கூறினான் மாலையில் சரியாக வீடு திரும்பவும் வழி செய்து கொடுத்தான்

வாரம் ஓன்று கடந்தது. அப்பா அறிவியம் புத்தகம் வாங்கி வந்தார் மகிழ்ச்சியுடன்
அதை வாங்கிய இரமேஷ்க்கு சோகம் தழுவியது 'இன்றைக்கு ஸ்கூக்கு போகனுமா' என்று.புத்தக பை எடுத்துக்கொண்டு பள்ளி நோக்கி நடந்தான். கால்கள் வேகத்தை குறைத்தது கண்களால் சுற்றும் முற்றும் பார்த்தான்.
தன்னை போல் வகுப்பறையில் தன்மானம் இழந்த கதிரேஷன் வந்தான் அவனிடம் அறிவியல் புத்தகத்தை கொடுத்துவிட்டு நடந்தான் வயல் பக்கங்கள் நோக்கி.
என்ன அங்கே இன்னொறு மாதவன் உருவாக்க பட்டுகொண்டிருக்கிறான்.

Saturday, April 25, 2009

சுதந்திரம் என்னும் தனிதன்மை


"ஏம்மா நமக்கு நல்ல சாப்பாடு கிடைக்குது நாம பண்ணுற தொழிலை மக்கள் ஏத்துகிறாங்க, நம்மலால மக்கள் சந்தோஷமா இருக்காங்க அப்புறம் ஏம்மா எப்ப பார்த்தாலும்
சோகமா இருக்கீங்க"
"நாமலாவது பரவாயில்லை இன்னொறு இடம் இருக்கு அதுல சும்மா தூங்கிட்டு இருந்தாலே சாப்பாடு கிடைக்கும் அது நம்மல விட மோசம்"
"ஏம்மா சும்மா இருந்தாலே சுகமா இருக்கும்முன்னா நல்லது தானே?"
"அது இல்லப்பா வாழ்க்கை நமக்குன்னு ஒரு தனிதன்மை இருக்கு நமக்கான இடம் இது கிடையாது. உங்க தாத்தா சுதந்திரம் தான் ஒவ்வொறு ஜிவனுக்கும் முக்கியம் முக்கியமுன்னு சொல்லி சொல்லியே செத்து போயிட்டாரு ஏன்னா சுதந்திரம்னா என்னனு அவருக்கு தெரியும், சுதந்திரமா இருந்தவரை இங்க கொண்டுவந்து விட்டதுனால நொந்தே செத்தாரு. இது அடிமை வாழ்க்கைப்பா. உன் தலைமுறையாவது சுதந்திரமா இருக்கனுமுன்னு தெய்வமா போன உன் தாத்தாகிட்ட தினமும் வேண்டிகிறேன், நீ என்னடானா"

தாய் யானை மகன் யானையிடம் சர்க்கஸ் கூடாரத்தில் தன்னுடைய வேலையை (கலை நிகழ்ச்சியை) முடித்துவிட்டு உரையாடிக்கொண்டது.

Tuesday, April 7, 2009

விளக்கு

பதினைந்தாயிரம் ரூபாய் பாக்கிக்காக பார்வதியின் பதிமூன்று வயது மகள் பக்கத்து ஊர் பரமசிவனுக்கு கல்யாணம் முடிக்கபட்டுவிட்டது,மகள் கேட்கிறாள் "எங்கம்மா நான் போரேன்?" அதற்கு அம்மா "பக்கத்து ஊரில் விளக்கு எத்தம்மா?" விளக்கு என்பதே உடைக்கப்பட்டுவிட்டது என்பதை அறியாமல்.

Tuesday, March 24, 2009

முத்தம்மா


முத்தாய் முன்று குழந்தை பெற்றால்
முத்தம்மா,
முகவரி இல்லாமல்,
முதியோர் இல்லத்தில்,
முடங்கிகிடக்கிறாள்.