Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Thursday, June 4, 2009

ஒரு மணி அடித்தால்

சொன்னதை மட்டும் சொல்லி
கிளி பிள்ளை ஆனாய்.
மிஸ்டுகால் மூலம் உரைத்தாய்
கொடுத்ததையே பெறுவாய்.

அக்காவின் குழந்தை பிறப்பை சொல்லி
சந்தோஷத்தை வாரி கொடுத்தாய்
அருமை நண்பனின் இறப்பை சொல்லி
சந்தோஷத்தை எல்லாம் கெடுத்தாய்

இன்கம்மிங் என்றால் மின்சாரம்
மட்டுமே என் செலவு
அவுட்கோயிங் என்றால் என் சம்பளம்
எல்லாம் உன் வரவு

கேட்க இன்பமாய் இருக்கிறது
உன் குரல்
உன் கட்டணத்தை பார்த்து
வரமறுகிறது என் குரல்

உன் பேச்சு கேட்பதால்
செவி கொடுக்க மறுக்கிறான் நண்பன் -
என் பேச்சை கேட்க.
அவன் பேச்சை கேட்க மறுக்கிறேன்
உன் பேச்சை கேட்க.

எத்தனை தொழிற்சாலைகள் உன்னை
உருவாக்கினாலும் ஏனோ உன் தலையாய
பண்புகளை விட மறுக்கிறாய்.
உன்னை பலநேரம் வைத்திருக்கும் மனிதன் தான்
தொலைந்து நிற்கின்றான்

Monday, May 18, 2009

பில்கேட்ஸை கைது பண்ணாங்களா?

1977 இல் பில்கேட்ஸ் வாகனத்தை வேகமாக ஓட்டி சென்றதால் கைது செய்யபட்டார்.







மன்சூர் அலிகான் தோல்வி.






ஊதா கலரு சட்டை போட்டு
ஊரெல்லாம் சொல்லிகிட்டு
இலட்சியம் தான் உனக்கிருக்குன்னு
இலட்சிய தி.மு.கவிலுல சேர்ந்ததுமே
உன் தலைவர் உனக்கு தான்
திருச்சின்னு ஒதுக்கி வைச்சான்

கடல மிட்டாய் வாங்கி குடுத்து
கட்சிகாரனை இழுக்க நினைச்ச
கட்டிங் கிடைக்குதுன்னு - பல
கட்சிக்கு பயபுள்ளைக ஓடி போயிட்டான்

பட்டம் தான் உன் சின்னமுன்னு
பக்குவமா எலக்ஷன் கமிஷன் சொன்னதும்
பல தெருவுக்கு போய்
ஓட்ட கேட்ட - சத்திரம்
பஸ் ஸ்டாண்டுக்கும் போய்
ஓட்ட தான் - நீ கேட்ட

உன்னையே நாயின்னு -
நீ சொல்லிகிட்டு
திருஞ்சத பார்த்த மக்கள்
பைத்தியம் தான் நீ-ன்னு
பயந்து போயி
பக்கத்து கட்சிக்கு ஒட்ட போட்டு
படுதோல்வி உன்னை ஆக்கினாங்க

பல தோல்வி - நீ கண்ட
படு தோல்வியும் - நீ கண்ட
பக்க பலமா யார் இருக்க
பதினொன்னுல நீ முதல்வராக


Thursday, May 14, 2009

உனக்குள்ள எனக்கு பிடிச்சது ஜன்னல் ஓர சேரு



பகட்டான உடை அணிந்து வந்தால்
உனக்கு பெயர் சொகுசு
பரிதாபமாய் நீ வந்தால்
உனக்கு இல்லை மவுசு.

அரசு புகை பிடிக்க தடை போட்டு
பல காலம் ஆச்சு
அதை கடை பிடிக்க உனக்கு மட்டும்
விதி விலக்குன்னு பேச்சு.

உனக்குள்ள எனக்கு பிடிச்சது
ஜன்னல் ஓர சேரு
சாலையில் நீ எனக்கு எப்பொழுதும்
தேவலோக தேரு

கரெக்ட் டைமுக்கு டிரைவர் அண்ணன்
கொண்டு வரமாட்டாரு உன்னை
ரைட் தான் கண்டெக்டர் அண்ணன்
சொல்லிடுவாரு நான் ஏறுவதற்க்கு முன்னே

பல நேரம் கேக்க மாட்ட
பிரேக் பேச்ச
சில நேரம் வாங்கிடுவ
எங்க மூச்ச

பல ஊர பாத்தாலும் இல்லை
உனக்கு அலுப்பு
சில ஊருக்கு போக மாட்டீங்கிற
ஏன் இந்த வெறுப்பு

நீ எப்பொதும் எனக்கு
கனவு கன்னி
உனக்காக காத்திருந்து எனக்கு
தவிக்குது தண்ணி.

Tuesday, May 12, 2009

மனுசன் காலையில நீராடனும் அது மாதிரி வாழ்க்கையில போராடனும்

நேற்று விஜய.டி.ஆரின் பேட்டி ஒன்றை கண்டேன். அதில் அவர் பேசிய பேச்சின் சில வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்(ல்)ளத்தான் இந்த பதிவு.







































அப்பு, பட்ட போட்டு காய்ச்சுன மரமா இல்ல பட்ட போடாத மரம்,ஏன்னா பட்ட போட்டு காய்ச்சுனாதான் ஜ்வ்வு ஏறுமுன்னு பெரியவங்க சொல்லுவாங்க. அது சரி காய்ச்ச மரத்துக்கு கல்லடி, காய்ச்சாத மரத்துக்கு உங்க சொல்லடியா? அம்மாடி.