Thursday, June 18, 2009

என் ஆத்தா மகமாயி





ஓடி விளையாடு பாப்பான்னு
உக்காந்து படிச்சேன்
ஒன்னுக்கு விடும் போது
ஓடி ஓடி திரிஞ்சேன்

ஒன்னாங்கிளாஸ் படிக்கும் போது
தெருவில நிக்கும் பாட்டிக்கு
சத்துணவு உருண்டயை தெரியாம குடுத்தேன்
ஊருக்குள்ள திரிஞ்ச நாய்க்கு
சோறு போடலைன்னு
அம்மாகிட்ட சண்டைக்கு நின்னேன்


காலையில வாத்தியார் சொல்லி
கொட்டு வைச்சவன் பகையாளியா ஆக்கினேன்
சாயங்காலம் நெல்லிகாய் கொடுத்தவுடன்
அவனே என் தோஸ்த்துன்னு ஓடினேன்


தங்கச்சிகிட்ட போட்ட அடி புடி
சண்டை இன்னும் மறக்கல
அண்ணன்கிட்ட திருடி தின்ன லட்டு
நெஞ்ச விட்டு இன்னும் இறங்கல

பக்கத்து வீட்டு மாமா மண்ட சொல்லுது
நான் எறிஞ்ச கல்லை
அப்பா அடிச்ச அடி இன்னும் சொல்லுது
நான் பறிச்ச மாங்காயை

பொறுப்பு கூடி போச்சுன்னு
பொறுமை இழந்து நிக்கிறேன்
வெறுமையான வாழ்க்கையில
வெந்து வெந்து தவிக்கிறேன்


அன்பை தூக்கி சாப்பிட்டு
ஆணவம் முழிச்சி நிக்குது
பொறமை தீயை வச்சுகிட்ட - எனக்கு
சுடுகிற காரணமும் தெரியல


உன் குழந்தைகளுல ஒருத்தன்னு
சொல்லிகிட்டு திரிகிறேன்
குழந்தை மனசை
அழிச்சிட்டு நிக்கிறேன் - என் ஆத்தா மகமாயி

14 comments:

  1. மகமாயின்னு சொன்ன உடனே,
    சாமிய பத்தின்னு நினைசேன்.

    பரவாயில்ல.. அருமையா இருக்கு
    கவிதை..

    ReplyDelete
  2. நீங்க பண்ண கூத்துக்கும் மகமாயிக்கும் என்ன சம்பந்தம்!

    ReplyDelete
  3. //பரவாயில்ல.. அருமையா இருக்கு
    கவிதை..//

    நன்றி கலை.


    //நீங்க பண்ண கூத்துக்கும் மகமாயிக்கும் என்ன சம்பந்தம்!
    //

    வேற ஒன்னும் இல்லை அண்ணா சும்மா மகமாயிட்ட பொழம்பினேன்.

    ReplyDelete
  4. நல்லாயிருக்கு பாஸ்..

    ReplyDelete
  5. திரு விஷ்ணு,

    உங்களை ஒரு தொடருக்கு அழைத்திருக்கிறேன்

    ReplyDelete
  6. நன்றி கோவி. கண்ணன் சார். எழுதிருவோம் சார். நம்ம வண்டவாழத்தை தண்டவாளத்தில் ஏத்தலாமுன்னு பாக்குறீங்க.

    ReplyDelete
  7. ஆத்தா மகமாயி இந்த பயபுள்ள பண்ணின தப்பு தண்டாவுக்கு அநியாயமா தண்டிச்சிபிடாத... அதான் குழந்தையின்னு சொல்லுதில்ல.. மன்னிச்சி விட்டுரு தாயி....

    ReplyDelete
  8. ரொம்ப நன்றி ஜார்ஜ். ஆத்தா மகமாயிகிட்ட என்னோட சார்பா வேண்டிகிட்டத்துக்கு.

    ReplyDelete
  9. மகமாயின்னதும் ஆத்தாக்கிட்ட என்ன சொல்றீங்கன்னு பாக்க வந்தேன்.
    அட! குழந்தைத் தன்மையையை தொலச்சிட்டு நின்ன பெரிய குழந்தையின் அறைகூவலைக் கேட்டேன். ஏக்கமாய்தானிருக்கும். நல்ல கவிதை!!

    ReplyDelete
  10. நல்லாயிருக்கு... வித்தியாசமாவும் இருக்கு :)

    ReplyDelete